திருவள்ளூர் பகுதி பொல்லிவாக்கத்தில் அமைந்துள்ள விஷ்வக்சேனா குளோபல் ஸ்கூலில் பயிலும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களுக்கு உளவியல் ரீதியாக குழந்தைகளை வளர்க்கும் முறைகளைக் குறித்து உளவியல் நிபுணர் முனைவர் M.ஹுஸைன் பாஷா அவர்கள் 22.06.2019 அன்று பயிற்சியளித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் திருமதி. நாகேஸ்வரி அவர்கள் தலைமை வகித்தார். குழந்தை வளர்ப்பில் ஒரு புதிய கோணத்தை இந்த பயிற்சி முகாம் அறிமுகப்படுத்தியுள்ளதாக பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர்.

மாஸ்டர்மைண்ட் கன்சல்டிரைனிங் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியை Sgn. சிவகாமி அவர்கள் ஒருங்கிணைத்தார்.