10 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எதிர்வரும் பொதுத்தேர்வை சிறப்பாக எதிர்கொள்ளும் விதத்தில் சிறப்பு பயிற்சி முகாம் 21.02.2019 அன்று வடசென்னை பட்டேல் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

விழி அமைப்பின் மாநில செயலாளாரும், JCI சென்னை சிட்டியின் பயிற்சித் துறை துணைத் தலைவரும், மாஸ்டர்மைண்ட் நிறுவனத்தின் இயக்குநருமான முனைவர் M.ஹுஸைன் பாஷா அவர்கள் கலந்துகொண்டு பயிற்சியளித்தார்.

விழி அமைப்பின் ஆர்.கே.நகர் பகுதி 38-வது வட்டமும், JCI சென்னை சிட்டியும் இணைந்து நடத்திய இந்த முகாமில் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

சென்னை சிட்டியின் தலைவர் Jc. A.S.மோகன், Jc. முஹமது ஹனீபா மற்றும் விழி அமைப்பின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.