புரைதாவில் உற்சாகத்தை ஏற்படுத்திய உணர்வாய் உன்னை!

சவுதி அரேபியாவின் அல் கசிம் மண்டலத்தில் உள்ள புரைதா, உனைசா, புகைரியா உள்ளிட்ட நகரங்களில் வாழும் தமிழ் மக்கள் கலந்து கொள்ளும் வகையில் உணர்வாய் உன்னை! நிகழ்ச்சி 05.04.2019 அன்று வெகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள உளவியல் நிபுணர் முனைவர் எம். ஹுசைன் பாஷா அவர்கள் பயிற்சி முகாமில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான ஆண்களுக்கும் பெண்களுக்கும் பயிற்சி அளித்தார்.

இந்த நிகழ்வில் சவுதி அரேபிய நாட்டின் உனைசா பகுதியின் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு அதிகாரி மரியாதைக்குரிய ஷேக் ஃபவாஸ் அல் முதைரி அவர்கள் வாழ்த்துரை வழங்கி, ஹுசைன் பாஷா அவர்களை பாராட்டி நினைவுப் பரிசை வழங்கினார்

பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மௌலவி மன்சூர் உமரி, புகைரியா ஜாலியாத் முனாஸ் மதனி, புரைதா ஜாலியாத் அப்துல்ராஸிக், அர்ராஸ் ஜாலியாத் உவைஸ் மதனி, உனைஸா அலிஅக்பர் பைஜி, மங்களக்குடி முகைதீன் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்காக அல்கசீம் மண்டல தமுமுகவினரின் உழைப்பும் சிறப்பாக இருந்தது.

– சினர்ஜி டைம்ஸ்