நெல்லை ஏர்வாடியில் பல்சுவை நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் ஆகஸ்ட் 17,18 ஆகிய தேதிகளில் ஈமான் அறக்கட்டளை சார்பில் ஈமானிய மொட்டுக்கள் என்ற பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் மாஸ்டர்மைண்ட் கன்சல்டிரைனிங் நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் ஹுஸைன் பாஷா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ‘பொருளாதார மேம்பாட்டிற்கான வழிமுறைகள்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

மேலும், பொருளாதார மேம்பாட்டிற்கு சிறந்தது உள்நாட்டு வருமானமா? வெளிநாட்டு வருமானமா? என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் நடுவராக இருந்து சிறப்பானதொரு தீர்ப்பை வழங்கினார். உள்ளூர் மக்களால் தயாரிக்கப்பட்டு திரையிடப்பட்ட பல்வேறு குறும்படங்களை தரம் வாரியாக பரிசீலித்து அதற்கான பரிசுகளை அறிவித்தார்.

முன்மாதிரியான பல்வேறுவிதமான நிகழ்ச்சிகளை ஒவ்வொரு வருடமும் நடத்திவரும் ஈமானின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்!

– சினர்ஜி டைம்ஸ்