ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் 26.01.2019 அன்று சென்னை ஜமாலியாவில் ஆற்றுப்படுத்துதல் துறையில் உள்ளவர்களுக்கான பயிற்சி முகாம் அதன் தலைவர் ஷபீர் அஹ்மது அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமில் குழந்தை மேம்பாடு மற்றும் குமரப்பருவத்தின் இயல்புகள் குறித்து மாஸ்டர் மைண்ட் கன்சல்டிரைனிங் நிறுவனத்தை சார்ந்த உளவியல் நிபுணர் முனைவர் எம்.ஹுஸைன் பாஷா அவர்கள் பயிற்சி அளித்தார். மேலும் நரம்பியல் நிபுணர் டாக்டர் எம்.எம். சலாஹுதீன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்வில் ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜான் முஹம்மது, சையது இபுராஹிம் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.