திருவாரூர் மாவட்டாம் கூத்தாநல்லூரில் உள்ள டெல்டா பப்ளிக் ஸ்கூலில் முதலாம் ஆண்டு விழா நிகழ்ச்சி 08.03.2019 அன்று சிறப்பாக நடைபெற்றது. அப்பள்ளி அறக்கட்டளையின் தலைவரும், எஸ்.டி. கூரியர் நிறுவனத்தின் நிறுவனருமாகிய நவாஸ் கனி அவர்கள் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட பேராசிரியர் ராமச்சந்திரன் மற்றும் சினர்ஜி இண்டர்நேஷனல் குழுமத்தைச் சார்ந்த உளவியல் நிபுணர் முனைவர் எம்.ஹுஸைன் பாஷா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

பள்ளி அறங்காவலர்கள் பொதக்குடி தாஜூதீன், ஹக்கிம், ஜெய்லானி, எஸ்.டி. கூரியர் அமீரகப் பிரிவின் பொதுமேலாளர் சிராஜ், சமூக செயற்பாட்டாளர் தாஹா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஆண்டு அறிக்கையை முதல்வர் ஜோஸஃபின் அவர்கள் வாசித்தார். பள்ளியைத் தொடங்கி முதலாம் ஆண்டிலேயே பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டதை அறிந்து கலந்துகொண்ட அனைவரும் வெகுவாகப் பாராட்டினர்.