குதூகலப்படுத்திய குழந்தை மனசு பயிற்சி முகாம்

சவுதி அரேபியாவின் ஜித்தா மாநகரத்தில் 06. 04.2019 அன்று குழந்தை வளர்ப்பின் சவால்களையும் அதை எதிர்கொள்ளும் வழிமுறைகளையும் விளக்கும் குழந்தை மனசு என்ற சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள உளவியல் நிபுணர் முனைவர் எம். ஹுசைன் பாஷா அவர்கள் பயிற்சி அளித்தார்.

மிகக் குறுகிய நாட்களில் ஏற்பாடு செய்த போதிலும் 200க்கும் அதிகமாக மக்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு பலனடைந்தனர். ஜித்தா மண்டல தமுமுக தலைவர் காரைக்கால் அப்துல் மஜீத் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்ட இந்த பயிற்சி முகாமில் அபுல் அமான் அவர்கள் தலைமை வகித்தார். பொறியாளர் கீழை இர்பான் அவர்கள் சிற்றுரையாற்றினார். இலியாஸ் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சி தமுமுகவின் மனிதவள மேம்பாட்டு அமைப்பான விழியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.