கடலூரில் 09.03.2019 அன்று நவீன யுகத்தில் குழந்தை வளர்ப்பு என்ற பயிற்சி முகாம் நடைபெற்றது. முனைவர் எம்.ஹுசைன் பாஷா அவர்கள் சிறப்பான முறையில் பயிற்சி அளித்தார்.

மேலும், Understand Quran Academy சார்பாக பயிற்சி வகுப்பு நடைபெற்றது. நெல்லிக்குப்பம் ஜும்மா பள்ளிவாசல் இமாம் மௌலவி ராஜ் முஹம்மது மன்பயி அவர்கள் இறை பயணம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அல் அலா ஹஜ், உம்ரா சர்வீஸ் நிறுவனர் மக்கா அலாவுதீன் அவர்கள், அஸ்மா நிறுவனத்தின் தலைவர் நஸ்ருதின் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

-சினர்ஜி டைம்ஸ்