ஆவடியில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை ஆவடியில் உள்ள தாருல் சித்திக்கீன் கல்லூரியில் BA (IS) பட்டப்படிப்பு தொடக்க விழாவும், கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியும் 14.04.2019 அன்று சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாஸ்டர்மைண்ட் கன்சல்டிரைனிங் நிறுவனத்தின் இயக்குனர் உளவியல் நிபுணர் முனைவர் எம். ஹுஸைன் பாஷா, பிரஸ்டன் பன்னாட்டு கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் மௌலவி கெளஸ் கான் உமரி, நபி கிரசன்ட் பள்ளியின் தாளாளர் குலாம் உசேன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

முக்தார் உமரி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ரிஸ்வான் அவர்கள் நன்றியுரையாற்றினார்