JCI சென்னை சிட்டி சார்பாக மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் 07.09.2018 அன்று அம்பத்தூர் சோழபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் நடத்தப்பட்டது. JCI சென்னை சிட்டியின் தலைவர் Jc. P. ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் Jc. HGF. லேனா அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் Jc. முனைவர் M.ஹுஸைன் பாஷா அவர்கள் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பயிற்சியளித்தார். இலக்கை நிர்ணயித்தல், அர்ப்பணிப்புடன் படிப்பதற்கான வழிமுறைகள், வெற்றிக்கான அடிப்படை தத்துவங்கள் ஆகியவற்றைக் குறித்து சிறப்பான முறையில் பயிற்சியளித்தார். நடத்தப்பட்ட பயிற்சி முகாம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் Jc. சுப்ரமணி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

TESTIMONIALS