ரியாதில் சைக்கோமெட்ரிக் தேர்வு எழுதிய மாணவர்கள்

ரியாத் மாநகரில் 24.03.2019 அன்று ஷிஃபா மருத்துவமனை கூட்ட அரங்கில் பள்ளி மாணவ-மாணவிகள் அவர்களது விருப்பப்படி உயர்கல்வியை தேர்ந்தெடுக்க ஏதுவாக உள்ள சைக்கோமெட்ரிக் தேர்வை எழுதி அவர்களது விருப்பப்பாடங்கள் எதுவென்று எளிதில் தெரிந்து கொண்டனர்.

இந்த தேர்வை உளவியல் நிபுணர் முனைவர் எம். ஹுசைன் பாஷா அவர்கள் நடத்தினார். மேலும், பெற்றோர்களுக்குத் தேவையான கல்வி விழிப்புணர்வு கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியை ரியாத் மண்டல தமுமுகவும், விழி அமைப்பும் சென்னை மாஸ்டர்மைன்ட் கன்சல்டிரைனிங் நிறுவனமும் இணைந்து நடத்தியது.