சென்னைப் புத்தகக் காட்சி 2019

ஜனவரி, 4 முதல் 20 வரை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறும் 42 ஆவது சென்னைப் புத்தகக் காட்சியில் உளவியல் மற்றும் கற்பித்தல் முறைகள் புத்தகத்தை அதன் நூலாசிரியர் முனைவர் எம்.ஹுஸைன் பாஷா அவர்கள் பேரா.சுப.வீரபாண்டியன், தோழர் திருமுருகன் காந்தி, எழுத்தாளர்கள் சாரு நிவேதிதா, தாழை மதியவன், எழுத்தாளர் C.S.ராஜு, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் மண்டல இயக்குநர் ஜெ.சதக்கத்துல்லாஹ், ஆகியோருக்கு அறிமுகம் செய்து பரிசளித்தார்.

மேலும், சமுதாயப் புரவலர்கள் யுனிவர்சல் ஷாஜஹான், இப்னு சவுத், RSD வீடியோஸ் தர்வேஸ் ஆகியோருடன் மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது குறும்பட இயக்குநர் PTM காஜா மைதீன் அஹ்ஸனி, சினர்ஜி இண்டர்நேஷனல் குழும நிர்வாக அலுவலர் முஸ்தாக் ஆகியோர் உடன் இருந்தனர்.